சனி, 17 நவம்பர், 2012

காற்றே கடவுள் - கோரக்கர்


கடவுள் யார் ? எங்கே இருக்கிறார் ? எப்படி இருப்பார் ? கடவுள் என்று சொல்லப்படுவது எது ? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு கோரக்கர் கூறும் ஒரு சிறிய விளக்கத்தை உங்களுக்கா இங்கு பகிர்கிறேன்.

                                                                             காற்றே கடவுள் - கோரக்கர்


கோரக்கர்
 "
நாடான நாடதனிற் கடவுளென்று
நானிலத்திலாட்டு வித்தல் காற்று காற்று
கோடான கோடிதெய்வம் காற்றுக்கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன்றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்றுமாகும்
அதுவகன்றா லகிலமுதலழிந்து போமே.(193)
                                   
                                        - கோரக்கர் சந்திரரேகை
பொருள் :
                                    உலகத்தில் கடவுள் என்று கூறுவதெல்லாம் காற்று, காற்றுமட்டுமே, கோடான கோடி தெய்வங்கள் இருப்பதாக சொல்வதும் இக்காற்றைத்தான், காற்றை கடவுளென்று கூறினார்களே தவிர வேறொன்றும் இல்லை. உலக இயக்கம் இயங்குவதும் காற்றால்தான் அது இல்லாவிட்டால் உலகம் அழிந்து போய்விடும் என்கிறார் கோரக்கர்.