சனி, 26 ஜனவரி, 2013

சிவ மந்திரம் -அகத்தியர்


சிவ மந்திரம்
 செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. (85)
                             

                                         -அகத்தியர் பரிபாஷை திரட்டு 500 
பொருள்:  மகனே சிவனுடைய மந்திரத்தை சொல்கிறேன் கேள்,
தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன சுத்தியுடன் வடக்கு
நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.

"ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா"
என்று

நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த செயலை நோக்கி
செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன் வருவார் என்கிறார்
அகத்திய மாமுனிவர்.
                      
                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்,ஏ