வியாழன், 30 ஜனவரி, 2014

திரிலோக வசியம்

 சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில் 
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து 
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து 
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று 

லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி  நமக்கு  வசியமாவார்கள்.
 

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வியாழன், 16 ஜனவரி, 2014

அரிசி வேகாத ஜாலம்

அரிசி வேகாத ஜாலம்
நிலவேம்பு வேரை சிறிய துண்டுகளாய் நறுக்கி அரிசி 
அறிக்கும்போதோ, உலைப்பானையிலாவது போட்டுவிட்டால் 
அவ்வரிசி மூன்று நாளானாலும் வேகாது. அவ்வேரை எடுத்துவிட்டு 
வேறு உலைவார்த்து வைத்தால்தான் அரிசி வேகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மது அருந்தும் சித்து


வாழைப்பட்டையை இடித்து அதன்சாற்றை கொஞ்சம் குடித்துவிட்டு
பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மதுவகைகளை எவ்வளவு
அருந்தினாலும் போதை ஏறாது
.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A