திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


திங்கள், 8 செப்டம்பர், 2014

அனுமந்தர் வசிய மந்திரம்


ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா.
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும்.
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 1 செப்டம்பர், 2014

ஜடை விருட்சம்

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
 இது கொல்லிமலையில் பெரியண்ணசாமி கோவிலுக்கு போகும் 
வழியில் உள்ளது. இம்மரமானது அடியில் இருந்து மேல் இலைகள் வரையில் யாவும் ஜடை ஜடையாக உரோமம் போல் கருநிறமுடன் இருக்கும்.இதன் இலை 1அடி அகலமும்1/2 அடி நீளமும்
உள்ளதாய் இருக்கும்.இதன் காய்களில் சுளைகள் இருக்கும்.
 

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
இப்பட்டை விட்டில் இருந்தாலே போதும் பில்லி,சூன்யம்,வைப்பு,
ஏவல் முதலியவைகளை செயல்படாமல் செய்துவிடும் சக்தி வாய்ந்தது. இப்பட்டையை பொடியாக்கி சாம்பிராணி போல் வீட்டில் தூபம் 
போடுவது மிகவும் நல்லது.எத்துன்பமும் வராமல் பாதுகாக்கும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்.எம்.ஏ