புதன், 28 டிசம்பர், 2016

காம கேசரி குளிகை-அகத்தியர்

அகத்தியர் அருளிய காமகேசரி குளிகை


*இக்குளிகையை உண்பதால் தாது விருத்தி உண்டாகும்,
*நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.
*ஆண்குறி பலப்படும் (நல்ல டெம்பர் கிடைக்கும்
*நரம்புகள் பலப்படும்,உடல் உறுதிபடும்,
*உடலில் வாசனை வீசும்,காயகல்பமாகும், 
*விந்து கெட்டி படும், விந்துவில் உயிரணுக்கள்கூடும், 
*உடலுறவில் பெண்கள் போதுமென சொல்லும் அளவிற்கு 
அவர்களை திருப்தி படுத்த முடியும் 

மேலும் இக்குளிகையை முறையாக உண்பவர்க்கு 
யாணையின் பலமும், 
குதிரையின் வேகமும் உண்டாகும் என்கிறார் அகத்திய
     
இக்குளிகையை தினமும் காலை-மாலை  1மாத்திரைவீதம் 
48நாட்கள் பசும்பாலிம் உண்ண வேண்டும்.

பத்தியம்:
புளிப்பு,அதிக காரம், அதிக உப்பு சேர்த்து உண்ணக்கூடாது,
புகை பிடித்தல், மது அருந்துகள், மருந்துண்ணும் நாட்களில் 
பெண்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கவுனமணி-கருவூரார்



நாட்டுவாய் காக்கையொன்று கொண்டுவந்து
நாற்கழஞ்சி சூதமதன் வாயிலிட்டு
நாட்டுவாய் புதுப்பானைய் குள்ளேமைந்தா
நற்கள்ளுக் குறுணியதில் நன்றாய்வாரே
வார்த்தந்தக் கள்ளுக்குள்ளே காக்கைதன்னை
வைத்தங்கே வாய்மூடி சீலைசெய்து
பாரப்பா ஆறுதிங்கள் ரவியில்வைத்துப்
பார்சூதங் குளிகையாய் வழியுமப்பா
சேரப்பா ஆறுபலம் வங்கந்தன்னை

 செப்பமுடன் உருக்கியதில் குளிகையூட்ட
ஆரப்பா நீர்வாங்கும் பின்னைக்கேளு
அப்பனே கெவுனமா வோடுந்தானே
கெவுனமாம் வாயிலிட்டு ஆகாசத்தோடு.
                                  கருவூரார் பலதிரட்டு

இம்முறையில் மணி செய்து வாயில் அடக்கி கொண்டால் ஆகாத்தில் பரந்து செல்லலாம் என்கிறார் கருவூரார். இங்கு இதை தெளிவாக வெளியிட விரும்பவில்லை அதனால்தான்  ஒரு பகிர்வாக மட்டும் பதிவிடுகிறேன்,


பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

சனி, 11 ஜூலை, 2015

மழை பொழியும் சித்து


மழை பெய்யாமல் அவதிப்படும் ஊர்களில் சில விதவைப்பெண்களை அழைத்து வந்து ஒரு மண் குடுவையில் அரிசி,
தேங்காய்,பழம், முதலியன எடுத்து போய் ஒரு ஏரியில் வைத்து பொங்கல் வைத்து ஒரு கோழிக்குஞ்சு பலி கொடுத்து
தலையை விரித்து போட்டு ஆகாயத்தைப்பார்த்து மழை வரவேண்டுமென்று வேண்டி ஒப்பாரி வைத்து கொண்டுப்போன
பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிடவும்.மறு நாளைக்குள் மழை பெய்து ஏரி நிறைந்துவிடும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்

புதன், 22 ஏப்ரல், 2015

சகல மந்திரங்களுக்கும் சாப நிவர்த்தி


சித்தர்கள் மற்றும் தேவதைகளின் சாபங்களினால் அவர்கள் 
கூறிய மந்திரங்கள் பலிக்காமல் போகலாம். இதனால் மந்திரமே 
பொய் என்றும் சித்தர்கள் வாக்கு பொய் என்றும் பலர் 
எண்ணுகின்றனர் அது தவறாகும்.  பொதுவாக நல்லவர்களுக்கும்,
தான தர்மங்கள் செய்வோர்க்கும்,பிறர் நலன் கருதுவோர்க்கும்
மனதில் தீய எண்ணங்கள் இல்லாதவர்க்கும்,

பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளவர்க்கும்,
எப்போது மன ஓர் நிலையுடன் இருப்பவர்க்கும்.

நல்ல மனம் படைத்தவர்க்கும்தான் மந்திரம் பலிக்கும்.
 

இது அனைத்தும் இருந்தாலும் சித்தர்களின் அனுகிரமும் 
குருவருளும் இருப்பவர்க்கே மந்திரங்கள் சித்தியாகும். 
அந்த வகையில் சித்தர்கள் எழுதி வைத்த மந்திரங்களுக்கு 
சாபமிட்டு வைத்துள்ளார்கள் அச்சாபத்தை நீக்காமல்
செபிப்போர்க்கு அதனால் தீமையும், வறுமையும், இடைவிடாத சிக்கல்களும், தேவையில்லாத பிரச்சனைகளும் உண்டாகும்.
மன நிம்மதி இல்லாமல் தவிக்கும்படியான சூழ்நிலை உருவாகும்.

எனவே மந்திரங்களை செபிக்கும் முன்னர் அதன் சாபத்தை நீக்கி
செபித்தால்தான் சித்தி பெறமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்.


மந்திரசாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங் சிங் கிரீம் ஸ்ரீம் அவ்வும் சவ்வும் 

சகல மந்திர சாபம் நசி மசி சுவாகா"
இம்மந்திரத்தை அமாவாசை இரவில் சுத்தமான தனி அறையில் 

பசு சாணத்தில் மெழுகி அதனுல் ஒரு குத்து விளக்கை ஏற்றி 
வைத்து குளித்துவிட்டு வெள்ளை துணி அணிந்துகொண்டு அவ்விளக்கின் எதிரில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு 
மன ஓர் நிலையோடு சித்தர்களை நினைத்து "அடியேன் ஓதும் 
மந்திர சாபம் அறவே நீங்க அருள்தர வேண்டும்" என மனதார வணங்கவிட்டு  ருத்திரட்ச்ச மாலையை கையில் ஏந்தியவாறு கண்ணை மூடிக்கொண்டு மந்திரதை 1008உரு செபிக்க 
மந்திரம் சித்தியாகும்.
 

1008 உரு செபிக்கும்வரை கண்ணை திறக்கக்கூடாது.
செபிக்கும் சமயத்தில் யாரோ அழைப்பது போலவும்,
உங்களை தொடுவது போலவும், பூச்சிகள் உடலில் ஊறுவது 
போலவும், பின்பக்கமாக உங்களை தள்ளுவது போலவும் 
தோன்றலாம் சிலருக்கு மயக்கம்கூட வருவது போல 
இருக்கலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் 
மந்திரத்தை 1008உரு செபித்து முடிக்கும் வரை  கண்ணை 
திறக்காமல் செபித்தால்தான் சித்தி உண்டாகும் என்பதை 
மனதில் கொள்ளவும்.
 

மந்திரம் சித்தியான பின்பு எந்த மந்திரத்தை செபிக்கும் 
முன்பும் இம்மந்திரத்தை 9 உரு செபித்து பின்னர் செபிக்க 
அதன் சாபம் நீங்கி அது சித்தியாகும்.
  

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

திங்கள், 16 மார்ச், 2015

இஸ்லாமிய மந்திரம்


ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதி வந்த பூதமுகமது
தன்னருளின் கல்லால் இரும்பால் கனலால் சட்டையிட்டேன்
வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும்
படைக்கப்பெற்ற ஜின் சைத்தான்களும் எங்கள்மேல் வராமல்
காவல் செய்தேன்.அடர்ந்து வராமல் இரவும் பகலும் ஹாதாவில்
பள்ளி அகம் புகுந்து கொண்டேன் மக்காவினை ஈசு நபியாணை
தரைக்குரு நபியாணை சுலேமான் நபியாணை நால்வேதத்தினாணை
நாற்பத்தி யீராயிரம் நஸாபி ஆணை பம்புடு பற்வைகளும் பட்டுவிழ வேண்டும்.
கூடிய பேய்களெல்லாம் உச்சாட வேண்டும் பக்கப் பேய்களெல்லாம் பறந்தோட வேண்டும்
ஆடிய பேய்களெல்லாம் குலைய வேண்டும்.உச்ச பேய்களெல்லாம் நடுங்க வேண்டும் ஓம் மூன்று அல்லாயிடத்தும்
இறல்லாவத்தும் அமன அல்லா எட்டுதிக்கும் பதினாறு கோணமும் டும் டும் ரீம் ரீம் மங் மங் சங் அக்னாலா குலா
இல்லல்லாஹி சுலேய்மான் சொல்.

 

இம்மந்திரத்தை ஒரு சுத்தமான இடத்திலிருந்து கை,கால்,
முகம் சுத்தி செய்து வெற்றிலைபாக்கு,தேய்காய்,பழம் சந்தனம் குங்குமம் பூ சூடம் சாம்பிராணி முதலியன வைத்து தீபம் காட்டி 
மேற் சொல்லிய மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 108 உரு வீதம் 
மூன்று நாள் செபிக்க சித்தியாகும்.
 

இதனால் பேய் பித்தவர்கள் துஷ்ட தேவதைகளின் இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏவல் பில்லி சூனியதால் பாதிக்க பட்டவர்கள்
முதலானோரை எதிரில் அமரவைத்து அவர் தலை முடியை ஒரு ஆணியில் சுற்ரி சாம்பிராணி காட்டி 9முறை இம்மந்திரத்தை ஓதி மந்திரிக்க சகல பாதிப்பிகளும் நீங்கும்.


குழந்தைகள் மற்றும் பயந்த பிள்ளைகளுக்கு இம்மந்திரத்தை ஓதி கயிறு மந்திரித்து குடுக்கலாம். துண்டை வைத்தும் மந்திரிக்காலாம் இதனால் சகல தீய சத்திகளின் இன்னல்களும் தீர்ந்து நலம் 
உண்டாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 6 மார்ச், 2015

ராஜாஜி செபித்த மந்திரம்

இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
 
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது


 தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.

அதன் பயனாய் பல பவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர் 

நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய் 
அமைந்ததே இம்மந்திரமாகும்.
 

இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் 
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.

அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய் 

இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.

  இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
 



                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

திங்கள், 26 ஜனவரி, 2015